யாழ்.பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதற்கு நிதி உதவி வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
யாழ்.ஊடக அமையத்தில், மாணவர் ஒன்றியம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய ஊடக சந்திப்பின்போதே மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளது.
இதன்போது பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்ட நிலையில், மாணவர்களினதும் தாயகத்தின் புலம்பெயர் தேசங்களிலுள்ள ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும் ஆதரவுகளினாலும் போராட்டங்களினாலும் மீண்டும் தூபி அமைப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆகையினால் இத்திட்டத்திற்கு நிதி தேவைப்படுவதால், அதற்கான நிதி உதவியை வழங்குமாறு அனைவரிடமும் மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிதியுதவியை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வைப்பிலிடுமாறும் வங்கி கணக்கு இலக்கத்தையும் மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைப்பதற்கு மாணவர் ஒன்றியத்திடம் மாத்திரமே இந்த நிதி உதவியை வழங்குமாறும் வேறு இடங்களில் இதற்கான நிதி சேகரிக்கப்படவில்லை என்பதையும் ஏதேனும் சேகரிப்புகள் இடம்பெற்றால் அதற்கு மாணவர் ஒன்றியம் பொறுப்பில்லை என்பதனையும் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
முனிதாச குமாரதுங்க கல்லூரிக்கு அருகில் பேருந்தில் இர
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிலிருந்து (கோபா) நாடாளு
பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரங்களை விவசாயிகளு
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் க.பொ.த. உயர்தரப் பரீட்சை
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 67 பேர் உயி
கடந்த 24 மணித்தியாலங்களில் 18 விமானங்களில் நடவடிக்கைகளி
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதி மற்றும் அதன் சுற்று வட்
சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகள் நாளை செவ்வாய
கடந்த ஒன்பதாம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் முன
மின்கட்டணம் செலுத்தாமையால் இன்று (24) குடிவரவு குடியகல்
இலங்கையில் தமது கேந்திர நலன்களை நிலைநிறுத்தும் முயற்
அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆக மாற்றியமையினால் 9 வீ
உக்ரைன் மீது படையெடுக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்
நாட்டு மக்கள் பெரும் நெருக்கடிக்கு மும்கொடுத்துள்ள ந
நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்க