More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிக்குமாறு கோரி பிரதமருக்கு கடிதம் !
பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிக்குமாறு கோரி பிரதமருக்கு கடிதம்  !
Jan 21
பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிக்குமாறு கோரி பிரதமருக்கு கடிதம் !

இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இதுவரை ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமிக்காமை தொடர்பாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சேவையாளர்கள் சங்கம் பிரதமருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.



அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், “ஆணைக்குழு உறுப்பினர்கள் ஐவரும் தங்களது இராஜினாமா கடிதங்களை வழங்கி ஒருமாதத்துக்கும் மேலாகின்றது.



இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஐவருக்கு பதிலாக ஆணைக்குழுவுக்கான புதிய உறுப்பினர்களை நியமிக்கவேண்டிய பொறுப்பு அமைச்சருக்கே உண்டு.



இது தொடர்பாக 2002 ஆம் ஆண்டின் 35 ஆவது இலக்க இலங்கை பொதுபயன்பாடுகள் ஆணைகுழுச் சட்டத்தில்  4 (4) பிரிவின் படி ஆணைக்குழுவுக்கான தவிசாளர் துறைக்கு பொறுப்பான அமைச்சரினால் நியமிக்கப்பட வேண்டும்.



அந்த வகையில் தற்பொழுது இலங்கை பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு நிதியமைச்சின் கீழ் இருக்கின்ற நிலையில் அமைச்சிற்கு பொறுப்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆணைக்குழு உறுப்பினர்களை நாடளுமன்ற பேரவையின் ஒருமைப்பாட்டுடன் நியமிக்க வேண்டியவராக உள்ளார்.



குறித்த வெற்றிடங்களை சமர்ப்பித்து ஒரு மாத காலத்துக்குள் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதுவரை இந்த வெற்றிடம் நிரப்பப்படாமல் இருக்கின்றது. எனவே இதற்கு பொறுப்பான பிரதமர் இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்களை நியமிக்கதாதன் காரணமாக ஏற்கனவே  திரவ இயற்கை எரிவாயுவிற்காக வழங்கிய அனுமதியைத் தொடர்ந்து விலைமனுக் கோரல்களினூடாக மின்சாரத்தில் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவது தாமதமாகின்றது.



அனுமதிக்கப்பட்ட மின்சார விலையை மீளப்பரிசீலனை செய்தல், தொகை மின்சார விநியோக உரிமையாளர்களிற்கான விலை தீர்மானிப்பு மற்றும் பொது மக்களுக்கான மின்சார கட்டணங்கள் தொர்பான ஆராய்வு போன்ற பல விடயங்கள் தாமதமாகின்றன.“ எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



ஆணைக்குழு உறுப்பினர்கள் ஐவரும் தங்களது இராஜினாமா கடிதங்களை வழங்கி ஒருமாதத்துக்கும் மேலாகின்ற நிலையிலேயே சேவையாளர்கள் சங்கத்தினால் குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan20

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் உயிரிழந்த

Oct05

இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்

Apr28

இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.02 லட்சம் எ

Sep08

தேர்தல் மற்றும் தேர்தல் முறைமைகள் குறித்த சட்டங்களை ம

Jun27

நாட்டில் இன்று(27) மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம ச

Mar04

வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்கள் இனிமேலும் எத

Jul14

தெல்லிப்பழை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இர

Jan31

வவுனியாவில் தொடர் செயின் அறுப்புச் சம்பவங்களில் ஈடுப

Apr10

உயர்ந்த  கட்டிடங்களுக்கு  மாறாக    ரம்மியமான  ச

Mar27

இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தின

Aug08

சீனாவிலிருந்து மேலும் 1.8 மில்லியன் சைனோபாம் தடுப்பூசி

May20

பொதுச் செலவினங்களை எளிதாக்கும் நோக்கில், அரசாங்கத்தி

Apr20

ரம்புக்கனையில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடத்த

Sep17

காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில

Apr06

கடந்த சில மாதமாக யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் களவாடப்

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 12 (07:52 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 12 (07:52 am )
Testing centres