போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகனத் தரிப்பிட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முகமாக நாட்டின் அநேக மாவட்டங்களில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சால் 12 மாடி கார் தரிப்பிடங்கள் கட்டப்படவுள்ளன.
இதன்படி கொழும்பு 07இலுள்ள நொரிஸ் கனல் வீதியில் கண் மருத்துவமனைக்கு சமீபமாக கார் தரிப்பிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
கொழும்பு பொது மருத்துவமனை வளாகத்தைச் சுற்றி வாகனத் தரிப்பிடவசதிகள் இல்லாததால் இப்பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலை அவசர சிகிச்சைக்கு நோயாளிகளை அனுமதிப்பதில் பாதகமான விளைவையும் ஏற்படுத்துகிறது.
இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரமளித்தது.
இதன் முதலாவது திட்டம் கொழும்பு லேக்ஹவுஸ் அருகே தொடங்கியுள்ளதுடன் நகர அபிவிருத்தி அதிகார சபை இதற்காக 1.113 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
இதேவேளை கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, டி.எஸ்.சேனநாயக்க மாவத்தை சுற்றுவட்டம், யூனியன் பிளேஸ், நாரஹேன்பிட்டி ஆகிய இடங்களில் வாகனத் தரிப்பிடங்கள் கட்டப்படுவதுடன் பத்தரமுல்ல, அநுராதபுரம், குருநாகல் ஆகிய இடங்களிலும் கார் தரிப்பிடங்களை அமைக்கும் திட்டமுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம
வணிக விமானங்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்
ஓய்வூதிய கொடுப்பனவு பெறுவோருக்கு ராணுவத்தினரால் வ
இலங்கை மக்களை வதைக்கும் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது சற்று செயலற்ற நிலையில்
ஒன்றாய் எழுவோம்' எனும் தொனிப்பொருளில் 75ஆவது சுதந்திர
இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மா
நான்கு மாவட்டங்களில், காவல்துறை அதிகார பிரிவு ஒன்றும்
சீனாவிடம் 1500 மில்லியன் டொலர்களை இலங்கை கோரிய போதிலு
மட்டக்களப்பில் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட கி
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி
நாட்டில் தற்போது நிலவும் கடும் எரிவாயு தட்டுப்பாடு கா
இலங்கை 5 இலட்சம் அஸ்ட்ராஜெனெகா கொவிட்-19 தடுப்பூசிகளை இ
களனி மற்றும் மகாவலி நீர்த்தேக்கங்களில் கணிசமான அளவு ம
இலங்கைக்கு மேலும் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர