ஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு எதிரான அவசர நிலையை மீறி இரவு விடுதிக்குச் சென்ற துணைக் கல்வி அமைச்சர் டெய்டோ டானோஸே மற்றும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அவசரநிலை அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த துணைக் கல்வி அமைச்சர் டெய்டோ டானோஸே, அவசர நிலையை மீறி இவர்கள் இரவு விடுதிக்குச் சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இதனை விசாரித்த பிரதமர் யோஷிஹிடே சுகா, அமைச்சரவையிலிருந்து டெய்டோ டானோஸே மற்றும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை பதவியிலிருந்து நீக்கினார்.
ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியைச் (எல்டிபி) சேர்ந்த டெய்டோ டானோஸே மற்றும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து கட்சியிலிருந்து விலகினர்.
லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் இளைய கூட்டணி பங்காளியான கோமிட்டோவின் முன்னாள் செயல் பொதுச் செயலாளர் கியோஹிகோ டோயாமா, ஜனவரி மாதம் 22ஆம் திகதி, டோக்கியோவின் கின்சா மாவட்டத்தில் இரவு விடுதிக்குச் சென்றதை ஒப்புக்கொண்டதையடுத்து அவரே முன்வந்து தனது பதவியை இராஜினாமா செய்தார்.
ஜப்பானில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு மக்கள் இரவில் தேவையின்றி வெளியில் நடமாடவும், விடுதிகள், மதுபான விடுதிகளுக்குச் செல்வதை தவிர்க்கவும், உணவகங்களை முன்கூட்டியே மூடவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள புச்சா நகரில் மனித உரி
ஜெர்மனி, பெல்ஜியம் நாடுகளில் தொடர் கனமழை காரணமாக ஏற்ப
உக்ரைன் ஜனாதிபதி வெலோடிமீர் ஸெலென்ஸ்கி கார் விபத்தில
பிரான்ஸ் நாட்டின் அதிபராக 2007-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வ
தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த மாத இறுதியில்
இரண்டு நாட்களாக ரஷ்ய தாக்குதலுக்கு உள்ளான உக்ரைனுக்க
ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி கைது செ
கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய
ஜேர்மன் துறைமுகத்திலிருந்து அமெரிக்காவின் ரோடே தீவி
உலக வர்த்தக அமைப்பின் அறிவுசார் சொத்துரிமை விதிகளில்
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டாலும் கூட அடுத
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு உதவும்
நடப்பாண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவி
பண மோசடி மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அள
