பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு மூன்று நாள் சுற்றுப்பயணமாக வந்தார். மதுரையில் அவர் ஒரே நாளில் அடுத்தடுத்து 10 கூட்டங்களில் பங்கேற்றார்.
தனி விமானத்தில் மதுரை வந்த நட்டா, தனியார் விருந்தினர் மாளிகையில் இரவு தங்கியவர், மறுநாள் காலையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று அம்மனை வணங்கினார். மதுரை ரிங் ரோடு வாஜ்பாய் திடலில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இடையில் நிர்வாகிகள் ஆலோசனைகள் கூட்டத்திலும் பங்கேற்றார்.
இதுகுறித்து நடிகையும், தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம், ‘’ஒரே நாளில் 10 பேக் டு பேக் கூட்டங்களில் பங்கேற்று கட்சி தொண்டர்களையும், மதுரை மக்களையும் ஊக்குவித்திருக்கிறார் தலைவர் ஜெ.பி.நட்டா. அவரின் வருகை சிறைந்த உத்வேகத்தினை தந்திருக்கிறது.
நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்..அதனால்தான் அவர் எங்களுக்கு தலைவராக கிடைத்திருக்கிறார்’’என்று தெரிவித்திருக்கும் அவர், ‘’உங்கள் கடின உழைபுக்கு என் நன்றி ஜி’’என்றும் தெரிவித்திருக்கிறார்.

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் இந்தியாவ
தீபாவளி விடுமுறை முடிந்த நிலையில் மீண்டும் சென்னைக்க
சர்வதேச அளவிலான சாலை விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்
பிரபல திரைப்பட நடன இயக்குநர் கலா, பாஜகவில் இணைந்தார். ப
உத்தர பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடை
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால
கர்நாடகாவின் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவது தொடர்
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமா
உத்தரபிரதேசத்தில் பண்டா மாவட்டத்தின் பபேரு கிராமத்த
மியன்மார் நாட்டில் சிக்கி தவிக்கும் 50 தமிழர்கள் உள்ளி
ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த
மலையில் சிக்கிய இளைஞரை இரண்டு நாட்களுக்கு பின் பாத்தி
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் சுசில் அரி இன்டர்நே&
