More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பருத்தித்துறை நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் பேரணிகள் உள்நுழைய தடை உத்தரவு
பருத்தித்துறை நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் பேரணிகள் உள்நுழைய தடை உத்தரவு
Feb 05
பருத்தித்துறை நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் பேரணிகள் உள்நுழைய தடை உத்தரவு

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில், பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் இன்று முதல் நான்கு நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்த பொலிஸார் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.



பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கே இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.



பொதுத் தொல்லையை ஏற்படுத்தல், கொவிட் -19 சுகாதார நடைமுறைகளை மீறுதல் உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின் கீழ் இந்த விண்ணப்பங்கள் பொலிஸாரால் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன.



பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையிலான சட்டத்தரணிகள் முன்னிலையாகி கடும் ஆட்சேபனையைத் தெரிவித்தனர்.



இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராயந்த பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் காயத்திரி சைலவன், பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்று தடை உத்தரவு வழங்கி கட்டளை வழங்கினார்.



பேரணியில் பங்கேற்போர் பல மாவட்டங்கள் ஊடாக அங்குள்ளவர்களையும் இணைத்து வருவதனால் கொவிட் -19 நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த தடை உத்தரவு வழங்கப்படுகிறது என்று நீதவான் கட்டளையில் சுட்டிக்காட்டினார்.



தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உட்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடாத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வட.கிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறைபடுத்த கோரியும் மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தக் கோரியும் முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கைகளை மதிக்கக் கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.



குறித்த போராட்டம் மூன்றாம் நாளான இன்று காலை, திருகோணமலையில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது. நாளைமறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) பொலிகண்டியை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul08

திருகோணமலையில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட

Oct04

திருகோணமலை கடல் பிராந்தியத்தில் சிறு படகுகள் மூலம் மீ

Aug30

புரெவிப் புயலினால் சேதமடைந்த கடற்றொழில் உபகரணங்களுக

Mar07

பண்டாரவளை - எலபெத்த கும்புர தகுன கெபிலேவெல பகுதியில் ப

May26

பருத்தித்துறை தும்பளையில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒ

Sep03

யாழ்ப்பாணம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட கொக்குவில் ப

Mar07

ஹுங்கம கடற்பரப்பில் ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உ

Jan22

சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும்

Feb11

இலங்கையில் தீவிரமடைந்துள்ள இராணுவத்தின் அழுத்தம் கா

Apr07

யாழ். மாவட்டத்தில் நாளை  (08) முதல் தேநீர், பால் தேநீர், ப

Aug06

புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பா

Oct03

மனித உரிமைகள் பேரவையின் கடந்தகால தீர்மானங்களை போலன்ற

Jan30

அரசாங்கம் பயங்கரவாதச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர

Apr30

குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக நிற

Mar18

காலி முகத்துவாரப் பகுதியில்  70 இலட்சம் ரூபா பெறுமதிய

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 12 (13:12 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 12 (13:12 pm )
Testing centres