பிரதமர் நரேந்திர மோடியால் சீனாவிற்கு எதிராக நிற்க முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
எல்லை விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “ கிழக்கு லடாக் எல்லையில் உள்ள நிலவரம் தொடர்பாக நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் அறிக்கை வெளியிட்டார். இப்போது நமது படைகள் பிங்கர்-3 மலைப்பகுதிக்கு செல்வதாக அவர் கூறினார்.
பிங்கர்-4 பகுதி நமது பிராந்தியம். இப்போதுஇஅந்த பிங்கர்-4 பகுதியில் இருந்து பிங்கர்-3 பகுதிக்கு நமது படைகள் சென்றுள்ளன. நமது பிராந்தியத்தை பிரதமர் மோடி ஏன் சீனாவுக்கு விட்டுக்கொடுத்தார்?
சீனா நுழைந்த இடத்திலிருந்து மிக முக்கியமான பகுதியான டெப்சாங் சமவெளி குறித்து பாதுகாப்பு அமைச்சர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. உண்மை என்னவென்றால் பிரதமர் இந்தியப் பகுதியை சீனாவுக்குக் கொடுத்திருக்கிறார்.
இதுபற்றி நாட்டு மக்களுக்கு அவர் பதில் அளிக்க வேண்டும். பிரதமர் ஒரு கோழை அவரால் சீனாவுக்கு எதிராக நிற்க முடியாது. அவர் நமது இராணுவத்தின் தியாகத்தை அவமதிக்கிறார்.
இராணுவத்தின் தியாகத்திற்கு துரோகம் செய்கிறார். இவ்வாறு செய்வதை இந்தியாவில் உள்ள யாரும் அனுமதிக்கக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
பருவநிலை மாற்றம் நாட்டின் கடல்சார் சூழலியல் அமைப்புக
உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவின் பலத்தை நிச்சயமாக நிர
இமாசல பிரதேசத்தின் சிர்மார் மாவட்டத்தில் பேக் பசோக் க
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வருகிற
கட்சி தொடங்கலாமா? என்று கடந்த இரண்டு வருடங்களுக்கு மு
தூய்மை நகரங்களின் பட்டியலில் தமிழ்நாடு பின்தங்கியுள
தற்போது சமூகவலைத்தளங்களில் பள்ளியில் உள்ள கழிவறையை ஒ
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களுடன் ப
தங்கத்தால் ஆன “தங்க கோவில்” என்றழைக்கப்படும் ஸ்ரீ
சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று நிரு
கொரோனா தொற்றினால் பெற்றோர் 2 பேரையோ அல்லது அவர்களில் ஒ
பிளஸ் 2 தேர்வு தொடங்கும் மே 3ஆம் தேதிக்குள் தமிழக சட்ட்
நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் சி
கேரள மாநில முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் அ
