வடக்கு மாகாணத்தில் மேலும் 5 பேருக்குக் கோவிட் -19 வைரஸ் தொற்று நேற்று உறுதி!
வடக்கு மாகாணத்தில் மேலும் 5 பேருக்குக் கோவிட் -19 வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் பூநகரியில் பணியாற்றும் யாழ். தென்மராட்சி, தனங்கிளப்புப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
“யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று 376 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் இருவருக்கு கோவிட் -19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பஸ்ஸில் பயணித்தவர்களிடம் கேரதீவில் வைத்து பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையிலேயே இவர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் மன்னாரைச் சேர்ந்தவர். மற்றையவர் தனங்கிளப்புப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை. இவர் பூநகரியில் பணியாற்றும் நிலையில் பஸ்ஸில் பயணித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 414 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் 3 பேருக்குக் கோவிட் -19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் மூவரும் கிளிநொச்சி – கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள். அத்துடன் இவர்கள் கரைச்சியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையின் பணியாளர்களாவர்
நாட்டிற்குள் இந்திய அமைதிப்படை வருவதற்கு வாய்ப்பிரு
தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு இலங்கை எடுத்துள்
பாணந்துறையில் உள்ள உணவகம் மற்றும் விடுதி ஒன்றில் தி
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கோதுமைமாவின் விலை 290 ர
நெல் கொள்வனவினை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாட
ஒரு தனி நபரின் தேவைக்காக 22 வது அரசியலமைப்புத் திருத்தம
எதிர்காலத்தில் தனியார் துறை வேலைகளில் பாரிய வீழ்ச்சி
15 வயது சிறுமியை ஏமாற்றி பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயே
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் கலந்துரையாடியதைத் தொ
பின்னவல மற்றும் மஹா ஓயா பிரதேசத்தில் சந்தேகத்திற்கிட
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தட்டுக
மாகாண மருத்துவமனைகளை மத்திய அரசு பொறுப்பேற்கும் விடய
அமைச்சு பதவி எதையும் ஏற்காதிருக்க நாடாளுமன்ற உறுப்பி
காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த, வாழைச்சேனை பொலி
இலங்கையில் உணவுப் பொதியொன்றின் விலை இன்று முதல் நடைம