More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வெளியேறுவது குறித்து பல தரப்பினர் யோசனை முன்வைத்துள்ளார்கள்!
 ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வெளியேறுவது குறித்து பல தரப்பினர் யோசனை முன்வைத்துள்ளார்கள்!
Mar 02
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வெளியேறுவது குறித்து பல தரப்பினர் யோசனை முன்வைத்துள்ளார்கள்!

அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வெளியேறுவது குறித்து பல தரப்பினர் யோசனை முன்வைத்துள்ளார்கள். ஆணைக்குழுவின் அறிக்கை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியாக சித்தரித்துள்ளது. காணப்படும் குறைப்பாடுகளினால் அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் வெளியேறமாட்டோம். தவறுகளை திருத்திக் கொண்டு பயணிக்கவே எதிர்பார்த்துள்ளோம் என சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.



சூரியவெல பிரதேசத்தில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



அவர் மேலும் குறிப்பிடுகையில், ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நம்பிக்கையற்ற பயனற்ற விசாரணை அறிக்கையினை சமர்ப்பித்துள்ளது. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் நாட்டு மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. மாறாக தேவையற்ற காரணிகள் மாத்திரமே அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.



குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரி யார், எவரது தேவைக்காக குண்டுத்தாரிகள் செயற்பட்டார்கள், என்ற விடயங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. மாறாக குண்டுத்தாக்குதலில் சூத்திரதாரியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர், மற்றும் காவல்துறை மா அதிபர் மற்றும் தேசிய பௌத்த அமைப்புக்களை ஆணைக்குழு சித்தரித்துள்ளது. இது முற்றிலும் தவறான செயற்பாடாகும்.



ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தின் பங்காளி கட்சியாக உள்ளது. ஒரு சிலரது செயற்பாடுகளும், கருத்துக்களும் சுதந்திர கட்சியை புறக்கணிக்கும் வகையில் காணப்படுகிறது. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சுதந்திர கட்சியை அடிப்படையாகக் கொண்டு வெளியான பின்னர் அரசாங்கத்தில் இருந்து சுதந்திர கட்சி வெளியேறுவது பொருத்தமானது என பல தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.



அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். தவறுகளை சுட்டிக்காட்டி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் வெளியேறமாட்டோம். ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான அறிக்கையை முழுமையாக நிராகரித்துள்ளோம். அறிக்கையை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளோம்.



தவறுகளை திருத்திக் கொண்டு அரசியல் ரீதியில் ஒன்றினைந்து பயணிக்கவே எதிர்பார்த்துள்ளோம். ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான அறிக்கை குறித்து பல்வேறு மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்த சிறந்த தீர்வை பெற முயற்சிக்கிறோம் என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar04

இன்று (04) காலை 09 மணி முதல் நாளை (05) நண்பகல் 12 மணி வரை வெல்லம்

Jan19

யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று

Feb06

நாட்டில் எந்த தேர்தலை நடத்தினாலும் அரசாங்கம் படுதோல்

Feb05

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடை வெளி யை பின்ப

Feb06

ஜப்பான் அரசின் நிதியுதவியில் யாழ். பல்கலைக்கழக கிளிநொ

Jan11

மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு நிலைப்பாட்டி

Jan01

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கம் செ

Oct25

இலங்கையில் இன்று மேலும் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம

Jun10

எரிவாயுவுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்

Mar10

நாட்டில் தற்போது நிலவும் கடும் எரிவாயு தட்டுப்பாடு கா

Jul25

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 2

Jun09

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு எதிர்வரும் செப்டெம்பர

Jan23

நாட்டின் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வ

Jan13

எந்த சூழ்நிலையிலும் கூட, நாட்டரிசி 1 கிலோ 100 ரூபாவுக்கு

Apr02

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு கலாநிதி

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 12 (10:34 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 12 (10:34 am )
Testing centres