இலங்கையில் கொரோனாவால் மரணிப்போரின் சரீரங்களைத் தகனம் மற்றும் அடக்கம் செய்வது தொடர்பான புதிய ஒழுங்கு விதிகள் அடங்கிய அறிவிப்பு அடுத்தவார முற்பகுதியில் வெளியிடப்படும் எனச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனாவால் மரணிப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படாமை நீண்டகாலமாக சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில் அதற்கான அனுமதி நேற்றுமுன்தினம் விசேட வர்த்தமானி மூலம் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டது.
இந்த வர்த்தமானியில் கொரோனாவால் மரணிப்பவரின் உடலைத் தகனம் அல்லது புதைக்க முடியும் என்பதுடன், மேலும் பல துணை உத்தரவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தப் புதிய துணை உத்தரவுகளின்படி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமைய, அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் சரீரங்கள் அடக்கம் செய்யப்பட வேண்டும்.
இதற்கமைய நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் வழங்கக்கூடிய உத்தரவுகளுக்கு ஏற்ப சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள விசேட கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு, அடுத்தவார முற்பகுதியில் புதிய ஒழுங்கு விதிகள் அடங்கிய அறிவிப்பு வெளியிடப்படும் எனச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் கூறியுள்ளார்.
அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் பதிவுசெய்தல், தொலைப
அமெரிக்காவிற்கு பயணிக்க மோசடி செய்பவர்களால் விளம்பர
அநுராதபுரம், பூஜா நகருக்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றி
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளம
மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்கும
நாட்டில் உள்ள பொருளாதார பிரச்சினை காரணமாகச் சரியான மு
முல்லைத்தீவு மாவட்டம் - புதுக்குடியிருப்பு பகுதியில்
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி
உடன் அமுலுக்கு வரும் வகையில் தின்பண்டங்களின் விலைகளை
நாட்டின் அவசர மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து கொள்வத
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிது
வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட ஐந்தாவத
கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத்துமாறு எவரையும் கட்ட
சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக் கொள்வனவில் அரசு பாரி