கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இவர்கள் போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக தலைநகர் மொகாதிசுவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கும் நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதை அவர்கள் வழக்கமாக கொண்டு உள்ளனர்.
இந்த நிலையில் மொகாதிசுவில் துறைமுகத்துக்கு அருகே உள்ள ஒரு ஓட்டல் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.
அப்போது வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஓட்டி வந்த பயங்கரவாதி ஓட்டலின் நுழை வாயிலின் முன்பு காரை நிறுத்தி வெடிக்கச் செய்தார். அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. கார் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் ஓட்டலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
பயங்கரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலில் 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 30-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்தவும், உலகளாவிய ச
ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தில் இருக்கும் இராண
இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரின் பார் மற்றும் உணவகங
உலக அளவில் கொரோனாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வ
உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1905-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க ந
தாக்கப்பட்ட போதும் பொதுமக்களை அருகில் சென்று சந்திப்
சீனாவில் முதன்முறையாக குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில
இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட், ( Naftali Bennett ) ரஸ்ய ஜனாதிபதி
உக்ரைன் புதிய, நீண்டகால போர் கட்டத்திற்குள் நுழைவதாக
உக்ரைன் மீது ரஷியா இன்று 13-வது நாளாக போர் தொடுத்து வர
ரஷ்யாவின் அதிபர் பதவியில் இருந்து விளாடிமிர் புட்ட
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
பிரபல ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டிகாப்ரியோ உக்ரைனுக்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை
