ஐதராபாத்தை சேர்ந்த அசாதுதின் ஓவைசி, மஜ்லிஸ் முஸ்லிமின் என்ற கட்சியை நடத்தி வருகிறார்
இந்த கட்சி அகில இந்திய அளவில் முஸ்லிம் சமுதாயத்தினரிடம் அதிக செல்வாக்குடன் இருக்கிறது. பீகார் மாநில தேர்தலில் மஜ்லிஸ் கட்சி தனித்து போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்றது. பல இடங்களில் இந்த கட்சி அதிகளவில் ஓட்டை பிரித்தது.
இதன் காரணமாகத்தான் அங்கு லல்லு கட்சி கூட்டணி ஆட்சிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது.
இந்தநிலையில் மேற்கு வங்காளத்திலும் மஜ்லிஸ் கட்சி தனித்து களம் இறங்குகிறது. மேற்கு வங்காளத்தில் முர்ஷிதாபாத், மால்டா, தெற்கு தினாஜ்பூர், வடக்கு தினாஜ்பூர் ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர்.
அவர்களின் ஆதரவு தங்கள் கட்சிக்கு கிடைக்கும் என்று கருதி இந்த பகுதியில் அதிகளவில் மஜ்லிஸ் கட்சி போட்டியிட உள்ளது. முர்ஷிதாபாத் மாவட்டத்தில் மொத்தமுள்ள 22 தொகுதியில் 13 தொகுதியின் வேட்பாளர்களை மஜ்லிஸ் கட்சி இறுதி செய்துள்ளது. மற்ற மாவட்டங்களிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட இருக்கிறார்கள்.
அங்கு ஓவைசி தீவிர பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். 13-ந் தேதி முதல் அவர் தேர்தல் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார். முதலாவதாக சாகர்திகியில் பிரசாரம் செய்யும் அவர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் கடந்த மாதம் 20-ம் தே
வண்ணங்களின் பண்டிகையான ஹோலி பண்டிகை உலகம் முழுவதும் உ
அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஊடுருவி நடத்தப்பட்ட இணைய
கொரனாவால் கடந்த 2 ஆண்டுகளாக உலகமே முடங்கிய நிலையில், தற
பொதுபல சேனா இயக்கம் தொடர்ந்தும் இனவாத மற்றும் மதவாதத்
கடந்த நவம்பர் மாத இறுதியில், தென்னாப்பிரிக்காவில் கண்
வங்காளதேசத்தில் சாலை போக்குவரத்துக்கு அடுத்தபடியாக
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைட
இந்தியாவை சேர்ந்த தீபன்ஷூகெர் என்பவர் அமெரிக்காவில்
ஆப்கானிஸ்தான் தலிபான்களின் வசமானதிலிருந்து பல்வேறு
புதிய சாத்தான்-2 ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் ஐரோப்பியக
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில்
மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி முதல்
அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையே எல்லைப் பகுதியில் கட
ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் ஏப்ரல் 5
