வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்துக்களின் இந்த பண்டிகை இன்றும் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் ஹோலி பண்டிகையையொட்டி ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன், இந்திய பிரதமரும், தனது நல்ல நண்பருமான மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து சமூகம், எனது நல்ல நண்பர் நரேந்திர மோடி மற்றும் அதை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும், மகிழ்ச்சியான மற்றும் வண்ணமயமான ஹோலி வாழ்த்துகள்!” என தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது பதிவில் இந்தி மொழியிலும் ஹோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது மட்டுமின்றி அவர் டுவிட்டரில் வீடியோ பதிவு மூலம் இந்திய மக்களுக்கு ஹோலி வாழ்த்து தெரிவித்தார். அதில் அவர் கூறியதாவது:-
இந்த ஆண்டு தொற்றுநோய், திருவிழாவை பாதிக்கும் என்றாலும் மக்கள் தங்கள் எதிர்காலத்தை இன்னும் அதிக நம்பிக்கையுடன் பார்க்க முடியும். பரந்த உலகுக்கு உதவும் தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்தியா ஒரு மிகப்பெரிய வேலை செய்து வருகிறது. ஒற்றுமை உணர்வில் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான ஹோலி வாழ்த்துகள்.
இவ்வாறு ஸ்காட் மாரிசன் கூறினார்.
கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 15 வயது சிறுவன் பொலிஸாரால் க
அமெரிக்கா - வட கொரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிற
புதிய வகை கொரோனாத் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தென் ஆ
அமெரிக்க பயங்கரவாதப் பட்டியலில் இருந்து ஈரானின் இஸ்ல
கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய பிறகு, தன்னுடைய முதல் சர்வ
ஜப்பானின் வடக்குப் பகுதியின் மீது வட கொரியா, பாலிஸ்டி
உக்ரைன் மீதான போரை ரஷியா கைவிட வேண்டும் என்று போப் ப
இந்தோனேசியா அதன் தலைநகரான ஜகார்த்தாவை கைவிட்டு, போர்ன
கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால
பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரி
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் கானேவால் மாவட்டத்தில
ராணுவ சீருடையில் இருந்த உக்ரைன் தம்பதிகள் சக வீரர்கள்
ரஷ்யாவுக்கு உதவுவதற்காக ஆயுதங்கள் ஏந்திய சீன இராணுவ வ
காபூல் விமான நிலையத்தில் காத்துக் கிடந்த 107 இந்தியர்கள
உக்ரைன் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் ரஷ்ய படையினரின் மு
