13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் படி மாகாணசபைகள் என்பது நாட்டில் அடிப்படை சட்டமாகும். எனவே தனிப்பட்ட நபர்களின் தேவைக்காக அவற்றை இரத்து செய்ய முடியாது. அத்தோடு தேர்தலை காலம் தாழ்த்த வேண்டிய தேவையும் அரசாங்கத்திற்கு கிடையாது என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
மாகாணசபை தேர்தல் தொடர்பான சட்ட மூலத்தில் காணப்படுகின்ற சிக்கல் தீர்க்கப்பட்டு விரைவில் தேர்தல் நடத்தப்படும். நாட்டின் அடிப்படை சட்டத்தை மீறி செயற்பட அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
மாகாணசபைத் தேர்தல் கடந்த அரசாங்கத்தால் திட்டமிட்டு காலம் தாழ்த்தப்பட்டது. இது தொடர்பான சட்ட மூலத்தில் காணப்படுகின்ற சிக்கல்களே இன்றும் தேர்தல் காலம் தாமதமடைவதற்கு காரணமாகும். 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் படி நாட்டின் அடிப்படை சட்டமாக மாகாணசபைகள் காணப்படுகின்றன.
இவற்றை மீறி செயற்பட அரசாங்கம் விரும்பவில்லை. அத்தோடு மாகாணசபைகள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் தனிப்பட்ட நபர்களின் தேவைக்காக இதனை மாற்றவோ இரத்து செய்யவோ முடியாது.
தேர்தல் முறைமைகள் தொடர்பில் சட்ட மூலத்தில் காணப்படுகின்ற சிக்கல்கள் நிவர்த்தி செய்யப்பட்டு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்றார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், தமது ஆதரவை இலங
இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு உதவுமாறு
புனரமைப்பில் உள்ளடக்கப்படாத மிகுதி வீதியைப் புனரமைத
மகிந்த ராஜபக்சவே ஆட்சியை தன்வசம் வைத்து்ள்ளதாக தெர
2030ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் ஒரு மன்னன் அவதரிப்பார் எ
கடந்த காலங்களில் இலங்கைக்கு ஆதரவாக இருந்த நாடுகளும
வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகள
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவான கொரோனா தொற
கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த உயிரியல் பூங்க
நாளை முதல் கொழும்பு 01 – 15 வரையான பகுதிகளில் மின் வெட்ட
கொரோனா பாதிப்பால் பெரும் பொருளாதார இழப்புகளைச் சந்தி
யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உ
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மகிந்த கஹந்தகமகே குற்றப
கிளிநொச்சியில் நேற்று (02) பிற்பகல் ஏற்பட்ட மினி சூ
கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் - காங்கேசன்து