மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் இறுதி அடக்க நாளான எதிர் வரும் திங்கட்கிழமை அன்று மன்னார் வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி துக்க தினத்தை அனுஷ்டிக்குமாறு மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.
அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,
ஆண்டகை அவர்கள் இனம், மதம் மொழி கடந்து மக்களுக்காக குரல் கொடுத்தவர். பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீதியை பெற்றுக்கொடுக்க தொடர்ந்தும் குரல் கொடுத்தார்.
தமிழர், முஸ்ஸிம், சிங்களவர் என்ற பாகுபாடு இன்றி அனைவரையும் நேசிக்கும் ஒருமனிதர். ஆன்மீகத்திற்கு அப்பால் மனித நேயத்தை நேசித்தவர். காணாமல் ஆக்கப்பட்டவர், கடத்தப்பட்டவர்கள், அரசியல் கைதிகளின் விடுதலைக்காக இறுதி மூச்சு உள்ள வரை குரல் கொடுத்தவர்.
இவரது இழப்பு ஒட்டு மொத்த தமிழ் பேசும் மக்களுக்கும் பாரிய இழப்பு. தமிழ் பேசும் மக்கள் ஒற்றுமையுடன் துக்க தினத்தை நினைவு கூற வேண்டிய கடற்பாட்டில் உள்ளோம்.
எனவே ஆயர் அவர்களின் இறுதி அடக்க நாளான எதிர் வரும் திங்கட்கிழமை மன்னார் வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி துக்க தினத்தை அனுஸ்ரிக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
சர்வதேச நீர் தினமான இன்று சுற்றாடல் பாதுகாப்பின் முக்
ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு கொடுக்
எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இ
தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார வி
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்த
வயோதிப தாயொருவருக்கு நேற்றைய தினம் வவுனியா நெடுங்கேண
2022 ஆம் ஆண்டில் சுமார் 690 கோடி அமெரிக்க டொலர்களை வெளிநாட்
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நியூசிலாந்து தூதுவர் மை
வவுனியா வேப்பங்குளத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்
பாடசாலை கிரிக்கட் போட்டியின் (Big Match) போது, இடம்பெற்ற வா
யாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்கு நேற்றைய தினம் கொவிட
யாழில் உள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் சிங்கள மொழியி
மட்டக்களப்பு நகரில் பிச்சைக்கார வேடம் பூண்டு துவிச்ச
முழு அரசுக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண
இலங்கைக் கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் நுழ