இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையன்று தேவாலயங்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதில் 270 பேர் பலியானார்கள். இதுபற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக்குழு, நாட்டில் பயங்கரவாதத்தை தூண்டி வரும் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களை தடை செய்யுமாறு சிபாரிசு செய்தது.
அதன்படி, ஐ.எஸ்., அல்கொய்தா, இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கம் உள்பட 11 பயங்கரவாத இயக்கங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பான அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் உத்தரவு, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், தடை செய்யப்பட்ட இயக்கங்களில் உறுப்பினராக இருப்பது, அந்த உறுப்பினர்களுக்கு அடைக்கலம் அளிப்பது, நன்கொடை அளிப்பது உள்ளிட்ட எல்லா தொடர்புகளுக்கும் தடை விதிக்கப்படுவதாகவும், இதை மீறுபவர்களுக்கு 10 முதல் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியா இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு என்பதனால் எந்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் ப
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 67 பேர் உயி
எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் மருந்து தட்டுப்ப
சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகள் நாளை செவ்வாய
கடந்த 24 மணித்தியாலங்களில், தனிமைப்படுத்தல் விதிகளை மீ
மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக அரச தலைவர் ச
புத்தளம் - கொழும்பு வீதியில் ஆராச்சிக்கட்டுவ பகுதியில
நாட்டின் பொருளாதார பயணத்தை நம்பகமான எதிர்காலமாக விவச
எந்த வித தாமதமும் இல்லாது சகல மக்களின் உரிமைகளையும் உ
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,பெரியகமம் பகுதியில் அம
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பி
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட
இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைய
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் பொது இடங்களில