More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • போர்க்கால அடிப்படையில் ஆக்சிஜன் சிலிண்டர், படுக்கைகள் வினியோகம் - ராஜ்நாத்சிங் உத்தரவு
போர்க்கால அடிப்படையில் ஆக்சிஜன் சிலிண்டர், படுக்கைகள் வினியோகம் - ராஜ்நாத்சிங் உத்தரவு
Apr 21
போர்க்கால அடிப்படையில் ஆக்சிஜன் சிலிண்டர், படுக்கைகள் வினியோகம் - ராஜ்நாத்சிங் உத்தரவு

போர்க்கால அடிப்படையில் மாநில அரசுகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், கூடுதல் படுக்கைகள் ஆகியவற்றை வினியோகிக்குமாறு பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களுக்கு ராஜ்நாத்சிங் உத்தரவிட்டுள்ளார்.



இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் உச்சம் தொட்டு வரும் நிலையில், ஆஸ்பத்திரிகள் திண்டாடி வருகின்றன. கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள், படுக்கைகள், மருந்துகள் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக புகார்கள் எழுந்துள்ளன.



இந்தநிலையில், முப்படைகளின் உயர் அதிகாரிகளுடன் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே, கடற்படை தளபதி கரம்பீர் சிங், பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார், ஆயுதப்படை மருத்துவ சேவைகள் தலைமை இயக்குனர் ரஜத் தத்தா, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவன தலைவர் சதீஷ் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.



இந்த கூட்டத்தில் ராஜ்நாத்சிங் பேசியதாவது:-



மூன்று படையினரும் நாடு முழுவதும் அரசு நிர்வாகங்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். கொரோனா சிகிச்சைக்கு தேவையான உதவிகளை அளிக்க வேண்டும்.



உதாரணமாக, மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்கள், கூடுதலாக தேவைப்படும் படுக்கைகள் உள்ளிட்ட பொருட்களை போர்க்கால அடிப்படையில் மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டும். பாதுகாப்பு தொடர்பான பொதுத்துறை நிறுவனங்கள், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம், ஆயுத தொழிற்சாலை வாரியம் ஆகியவை இப்பணியில் ஈடுபட வேண்டும்.



அதுபோல், கொரோனா பரவல் காலத்தில், தேவையான மருத்துவ சாதனங்களை வாங்க முப்படையினருக்கு நிதி அதிகாரம் அளிக்கப்படுகிறது.



இவ்வாறு அவர் பேசினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun18

கொரோனாவின் எதிரொலியாக உலகம் முழுவதும் வறுமை அதிகரித்

Feb05

முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்க

Mar05

கட்சி தொடங்கலாமா? என்று கடந்த இரண்டு வருடங்களுக்கு மு

Jan15

தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரை சேர்ந்தவர் ராம்குமார்.

Mar11

அமெரிக்காவில் ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு அவ

Nov12

ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை

Feb25

நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் த

May08

வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த அவர், கடந்த 2015-ம் ஆண்டு

Mar07

உத்தரகாண்ட் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாண

Mar14

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்

Apr18

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் இந்தியாவ

Apr02

ஈஷா யோகா மையத்தில் தங்கியிருக்கும் சுமார் 400 பேருக்கு

Aug11
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (05:05 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (05:05 am )
Testing centres