கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது இடங்களில் முககவசம் அணியாமல் சென்றால் ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
தற்போது சென்னை தலைமை செயலக வளாகத்தில் முககவசம் அணியாமல் யாரேனும் சென்றால் அவர்களுக்கும் ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது.
இதுகுறித்து பொதுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின்படி முககவசம் அணியாமல் இருப்பது, பொது இடங்களில் எச்சில் துப்புவது ஆகியவை தவறான பழக்கவழக்கமாகும். இது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். பொது இடங்களில் அபராதம் விதிக்கப்படுவது போல் இனி தலைமை செயலகத்திலும் அபராதம் விதிக்கப்படும்.
அதன்படி தலைமை செயலக வளாகத்தில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். சமூக இடைவெளியை பின்பற்றாமல் சென்றால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும். முககவசம் அணியாமல் சென்றால் ரூ.200 அபராதமும் விதிக்கப்படும்.
அரசின் இந்த உத்தரவை கடுமையாக பின்பற்ற வேண்டும் என தலைமை செயலக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் த
டெல்லியில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தனி விமானம் மூலம் இரண்
சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் படத்தில் இடம்ப
தமிழகத்தில் இனி நிரந்தர ஆட்சியாக திமுக ஆட்சி அமைந்திட
கிழக்கு லடாக்கில் பல இடங்களில் எல்லை கோட்டை தாண்டி சீ
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
தமிழ்நாடு அரசு பணியாளர் சட்ட விதிகளின்படி, பணியில் உள
பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்
காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட
கோவை ஓட்டர்பாளையம் சம்பவத்தில் விவசாயி கோபால்சாமி மீ
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இந்தியா கங்கண
அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் 6 சிலிண்டர் இலவசமாக வழங்
அந்தமான் கடற்பகுதியில் நாளை ‛அசானி'புயல் உருவாகிறது
அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்
