இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனை சரிசெய்ய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்தும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி உதவி செய்ய முன்வந்துள்ளன.
இந்நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து விமானம் மூலமாக 600 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 50 வெண்டிலேட்டர்கள் மற்றும் பிற மருத்துவ உபகரணங்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கு வந்து சேர்ந்தன. இந்த தகவலை இந்தியாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்ஷி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவுதினம்
கட்சி மாறுவதற்காக வேறொரு கட்சி தலைவரை ஒரு முறையாவது ந
பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை எதிர்பாராத விதமாக ஒருவர
இந்தியா முழுவதும் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடும
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில
பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 14 ஆம் திகதி சென்னை வர
முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு மற்றும் அவரது உறவி
அரசியல் கட்சிகள் வாக்குக்கு வழங்கும் பரிசுப் பொருட்க
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக அமைக்கப்பட
அ.தி.மு.க. 
இப்போது தான் அமித் ஷா காஷ்மீர் அறிவிப்பை அறிவிக்க வேண
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே உள்ள யசோதா நகரை சே
இலங்கையில் இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கான சாத்திய
தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந
மக்கள் மத்தியில் தான் நடிக்க வேண்டிய அவசியமோ, தேவையோ இ
