கொரோனா தொற்று தீவிரம் பெற்றதையடுத்து வவுனியாவில் பொது சுகாதார பரிசோதகர்கள் போக்குவரத்து வாகனங்களை வழிமறித்து விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டில் அதிகரித்துள்ள கொரோனா தாக்கம் வவுனியா மாவட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதுடன், இன்று (04.05) காலை 6.30 மணி முதல் விசேட சோதனை நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.
இதன்போது வவுனியா – மன்னார் வீதியின் பட்டானிச்சூர், குருமன்காடு ஆகிய பகுதிகளில் வீதிகளுடாக பயணித்த பயணிகள் பேரூந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்கள் என்பவற்றை வழிமறித்து சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து சுகாதார பரிசோதகர்கள் சோதனை நடத்தினர்.
இதன்போது சமூக இடைவெளிகளைப் பேணாது அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ற பேரூந்துகளுக்கு எதிராக முறைப்பாடுகளை பதிவு செய்ததுடன், முச்சக்கர வண்டிகளில் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராகவும் முறைப்பாடுகளை பதிவு செய்தனர்.
அத்துடன் மோட்டர் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகள் என்பவற்றில் பயணிக்கும் போது முககவசம் அணியாது சென்றவர்களையும் வழிமறித்த சுகாதார பரிசோதர்கள் அவர்களுக்கு எதிராகவும் முறைப்பாட்டை பதிவு செய்தனர்.
குருந்தூர்மலைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பா
தம்புள்ளை பகுதிக்கு சென்று மரக்கறிகளை கொள்வனவு செய்வ
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் ரயில
கருத்து தெரிவித்துக்கொண்டிருக்காமல், விவசாயிகளுக்கு
ஓமான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்க
கிளிநொச்சியில் நேற்று (02) பிற்பகல் ஏற்பட்ட மினி சூ
மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோச
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப் புள்
நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய பிரித்தானிய பெ
73 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இலங்கை திருநாட்டின
முல்லைத்தீவு மாவட்டம் - புதுக்குடியிருப்பு பகுதியில்
பிங்கிரிய போவத்தை பகுதியில் மனித எச்சங்களுடன் மோட்டா
அபூதாபியிலிருந்து திருகோணமலை துறைமுகம் நோக்கிச் சென
அரசாங்கம் ஏழைகளின் கண்ணீரில் சவாரி செய்கிறது என தமிழ்
முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகர