அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை கலாசாரம் நாளுக்கு நாள் விசுவரூபம் எடுத்து வருகிறது. இந்த கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என்று அந்த நாட்டின் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில், இத்தகைய துப்பாக்கி வன்முறையை தடுப்பதற்காக முதல் கட்டமாக சட்ட விரோத கடத்தல் துப்பாக்கி வர்த்தகத்தை ஒடுக்க வேண்டும் என்று ஜோ பைடன் கருதுகிறார். இதற்காக அவர் அதிரடியாக 5 பணிக்குழுக்களை அமைத்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க சட்டத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 18 மாதங்களில் வன்முறை குற்றங்கள் அதிகரிப்பதில் துப்பாக்கி வன்முறை ஒரு முக்கிய உந்துதலாக அமைந்துள்ளது. மேலும், இப்போது சட்ட விரோத துப்பாக்கி வர்த்தகத்தை ஒடுக்குவதற்கு 5 பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பது, கொடிய துப்பாக்கி சூடு மற்றும் பிற வன்முறையில் பயன்படுத்தப்படுகிற சட்டவிரோத கடத்தல் துப்பாக்கி வினியோகத்தை தடுப்பதில் ஒரு முக்கிய படியாக அமையும்” என கூறப்பட்டுள்ளது.
இந்த 5 பணிக்குழுக்கள் நியூயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், சான்பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி, வாஷிங்டன் ஆகிய இடங்களில் துப்பாக்கி கடத்தல் பகுதிகளில் தீவிர கவனம் செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை சேர்ந்த தீபன்ஷூகெர் என்பவர் அமெரிக்காவில்
ஜேம்ஸ் பாண்ட் பட ஹீரோ டேனியல் கிரேக்கிற்கு, இங்கிலாந்
ஆப்கானிஸ்தானில் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட ந
ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அமெர
சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் தலைநகரான உகானை நேற்று முன
தைவானின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது ஹுயல
ஏவுகணை சோதனை பாகிஸ்தான் நேற்று கண்டம் விட்டு கண்டம் ப
உக்ரைன் நாட்டில் ரஷ்யா, புதிய போலி குடியரசை உருவாக்க ம
காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டு க
ரஷ்யா - உக்ரைன் இடையே 8-வது நாளாக போர் நடைபெற்று வரும் நி
அவுஸ்ரேலிய கடற்பரப்பிற்கு அருகே பயங்கர நிலநடுக்கம் ஏ
பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ துதர்தே சர்ச்ச
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக அதி
இங்கிலாந்தில் மேலும் 40 ஆயிரத்து 77 பேரை கொரோனா வைரஸ் பெர
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான முக்கிய எல்
