மகாராஷ்டிராவில் உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா வைரசால் 3-வது அலை ஏற்படும் அபாயம் இருப்பதாக மாநில சுகாதாரத்துறை கடந்த வாரம் எச்சரித்து இருந்தது. இந்தநிலையில் மாநிலத்தில் 21 பேர் டெல்டா பிளஸ் உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது.
இதுகுறித்த தகவலை மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறினாா். இதில் அவர், "மாநிலத்தில் அதிகபட்சமாக ரத்னகிரியில் 9 பேர் டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜல்காவில் 7 பேரும், மும்பையில் 2 பேரும், பால்கர், தானே, சிந்துதுர்க்கில் தலா ஒருவரும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் 7 ஆயிரத்து 500 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு இருந்தது. அப்போது மாதிரிகளின் மரபணு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு தான் 21 பேருக்கு உருமாறிய வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மாதிரிகள் கடந்த மே 15-ந் தேதி முதல் சேகரிக்கப்பட்டவை ஆகும். தற்போது தொற்று பாதித்தவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து வருகிறோம். மேலும் அவர்களின் முந்தைய பயண விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. உருமாறிய டெல்டா பிளஸ் வைரசை கட்டுப்படுத்த முடியும்’’ என்றார்.
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 23-ந்தேதி கலைவ
மகாராஷ்டிராவில் கொள்கை முரண்பாடு கொண்ட சிவசேனா, தேசிய
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்ப
சென்னை புறநகர் பகுதிகளுக்கு கூடுதல் மின்சார ரெயில்கள
எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் மற்ற
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொத்தாம்பாடி பகுதிய
புதுடெல்லி இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் அமைப்ப
உத்தரகாண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உட
மகாராஷ்டிரா தலைநகர் மும்பை அல்டாமவுன்ட் ரோட்டில் ரில
ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவரும் ஐதராபாத் எம்.பியுமான 
சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை இந
இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் பிரதமர் இம்ர
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அரசியலை விட்டு ஒதுங்கி
ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் மது
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வருகிற
