குடல் பாதிப்புக்காக இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமல்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த போப் ஆண்டவர் பிரான்சிசுக்கு கடந்த 4-ந்தேதி அறுவை சிகிச்சை நடந்தது.
பெருங்குடல் சுருக்கத்தால் அவதிப்பட்ட அவருக்கு, பெருங்குடலின் இடதுபாகம் அறுவை சிகிச்சை செய்து நீக்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்குப்பின் வேகமாக அவர் குணமடைந்து வருகிறார்.
எனினும் அறுவை சிகிச்சை நடந்து 3 நாட்களுக்குப்பின், அதாவது நேற்று முன்தினம் மாலையில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. எனவே அவரது உடல் நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அதேநேரம் நேற்று காலையில் அவருக்கு வழக்கமான பரிசோதனைகளுடன், மார்பு மற்றும் வயிற்றுப்பகுதியில் ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதில் எந்த பிரச்சினையும் இல்லை என கண்டறியப்பட்டு உள்ளது.
போப் பிரான்சிசால் சாப்பிடவும், துணையின்றி நடக்கவும் முடிவதாகவும் வாடிகன் கூறியுள்ளது. ஆஸ்பத்திரியில் அவ்வப்போது நடைபயிற்சியில் ஈடுபட்டுள்ள அவர், அங்குள்ள இளம் புற்றுநோயாளிகளுக்கு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டதாகவும் வாடிகன் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
போப் பிரான்சிஸ் விரைவில் உடல் நலம் பெற்று திரும்புவதற்காக உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது, சீனாவு
யுக்ரைனில் - ரஷ்யா போர்நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக
ஜப்பானில் உள்ள 125 மில்லியன் மக்கள் தொகையில் சுமார் 29 சத
உக்ரைன் ரஷ்யா போரில் பிணைக்கைதிகளாக பிடிபட்டுள்ள ராண
மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந
தைவானின் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணகள் ரெய
ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் புதிய தாக்குதல் உத்தியொன்
அவுஸ்ரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தின் கடற்கரையில் 14
ரஷ்ய விமானங்கள், ஹெலிகொப்டர்கள் உக்ரைன் வீரர்களால் வீ
உக்ரைன் எல்லையில் உச்சகட்ட போர் பதற்றம் அதிகரித்துள்
ரஷ்யாவிடம் இருந்து பெறும் மசகு எண்ணெய்க்கு அமெரிக்கா
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப
உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் மக்களுக்கு பொ
சீனாவின் வுகான் நகரில் முதன்முதலில் தோன்றிய கொரோனா வை
அமெரிக்காவில் கார் திருட்டில் ஈடுபட்ட 13 வயது சிறுவன் ப
