உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னால் இருக்கும் மர்மங்கள் என்ன என்பதனை ஆராய்ந்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். அதைவிடுத்து இந்த விசாரணைகளை மேலோட்டமாக முன்னெடுத்து, ஒருசிலரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி இந்த விடயம் முடிந்துவிட்டது எனக் கூறி, விசாரணைகளை மறைக்க முயற்சிக்க வேண்டாம் என்று அரசைக் கேட்டுக்கொள்கின்றோம் என கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள ஒரு சில விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் முன்வைத்துள்ள கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
எவ்வாறாயினும் சம்பவத்தின் பின்னால் உள்ள மர்மங்கள் குறித்து ஆராயாமல் வழக்குகளைத் தொடர்வதன் மூலம் எமது மக்களை மகிழ்ச்சியடையச் செய்ய முடியுமென்று அரசோ அல்லது அது சர்ந்த நிறுவனமோ நினைத்தால் அது தம்மைத்தாமே ஏமாற்றுவதாக அமைந்துவிடும்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் இது ஆழமான சதித்திட்டம் என்று முன்னாள் சட்டமா அதிபர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அந்தச் சதித்திட்டத்தை அறிந்துகொள்ளும் உரிமை எமக்கு உள்ளது” – என்றார்.
இன-மத உணர்வை தூண்டி ஆட்சி செய்ததன் விளைவே இலங்கையில் த
நாட்டில் நாளை முதல் 21ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் அம
வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர
நாட்டில் நாளை (திங்கட்கிழமை) 2 மணித்தியாலம் 20 நிமிடங்கள
நீதிமன்ற கட்டமைப்பு அனைத்தையும் டிஜிட்டல் மயப்படுத்
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வடமாகாண ச
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஏப்ரல்
போராட்டங்களை நடத்தி மக்கள் துன்புறுத்தப்பட்டால் பொல
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில்
ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹர
இரணைதீவில் பொது மக்கள் வசிக்காத பகுதியில் மாத்திரமே க
பண்டிகை கால குற்றங்களை தடுக்கும் நோக்கில் மேல் மாகாணத
450 கிராம் நிறையைக் கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை 10 ரூ