நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக மக்களை கவரும் விதமாக பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்திருந்தது. குறிப்பாக பெண்களுக்காக அறிவித்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் திட்டம், பேருந்துகளில் இலவசப் பயணம் திட்டம் மக்களின் கவனத்தை ஈர்த்தது. ஆட்சிக்கு வந்த முதல் நாளே பேருந்தில் இலவசமாக பயணம் செய்வதற்கான கோப்பில் முதல்வர் கையெழுத்திட்டார். அடுத்த சில நாட்களிலேயே அத்திட்டம் அமலுக்கு வந்துவிட்டது. ஆனால், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கான எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
ஸ்மார்ட் கார்டுகளில் பெண்களின் புகைப்படங்கள் கொண்ட குடும்பத் தலைவிகளுக்கே ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதனால், புதிதாக குடும்ப அட்டை விண்ணப்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக அரசு தரப்பில் அண்மையில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் 1,000 வழங்கும் திட்டம் நிதி நிலைக்கு ஏற்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தொகுதி வாரியாக முகாம் அமைத்து ரேஷன் கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடல் வழியாக ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க கடலோர காவல்படையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுக
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் வரும் ஒக்ட
உக்ரைனில் இருந்து தனது வளர்ப்பு நாய்களுடன் தமிழகத்தி
கோவிஷீல்டு தடுப்பூசியில் உள்ள மூலப்பொருள்களால் கடும
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த லட்சுமி நகர் பகுத
இந்தியாவில் கடந்த டிசம்பர் 2-ம் வாரத்தில் இருந்து இதுவ
கொரோனா பரவலுக்கு பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி இன்ற
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 சீட்டுதான் ஒதுக்கப்பட
கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்தவர் ரமேஷ்
இயன்முறை மருத்துவர்களின் முயற்சிகளைப் போற்றுவோம் என
டெல்லியில் நிலவும் பதற்றத்தை கட்டுப்படுத்தும் வகையி
‘இனி தே.மு.தி.க.வுக்கு அரசியலில் ஏற்றமே கிடையாது. இறங்
கோவையில் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள்
