யாருடனும் பழகவில்லை என்று மனைவி எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காமல் அவரை கடப்பாறையால் அடித்து கொலை செய்ததோடு மாமியாரையும் அடித்து கொலை செய்துள்ளார் முருகன். கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர் பேட்டை அடுத்த கட்சிக்குச்சான் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தினமும் மது அருந்து முருகன், மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நாளடைவில் அவர் மீது சந்தேகப்பட்டு பிரச்சனை செய்து வந்துள்ளார். யாருடனும் எந்த பழக்கமும் இல்லைஎன்று மனைவி எவ்வளவோ எடுத்து சொல்லியும் கூட முருகன் கேட்கவில்லை.
நாளுக்கு நாள் பிரச்சனை அதிகமானதால் முருகனின் மனைவி மகாலட்சுமி கோபித்துக்கொண்டு அவர் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
உடனே முருக்கம்பட்டி சென்று மகாலட்சுமியை அழைத்திருக்கிறார். குடிபோதையில் இருந்த முருகனிடம் எந்தபதிலும் சொல்லவில்லை மகாலட்சுமி. இதனால், மாமியாரிடம் ஒன்று என் மகாலட்சுமியை என் வீட்டுக்கு அனுப்பிவை, இல்லை என்றால் நான் வாங்கிக்கிப்போட்ட நகைகளை திரும்ப கொடுத்துவிடு என்று சொல்லி இருக்கிறார்.
இதனால் மாமியார் அவரை சமாதானப்படுத்தி சாப்பாடு போட்டு தூங்கச்சொல்லி இருக்கிறார்.
சாப்பிட்டுவிட்டு தூங்கிய முருகன், நள்ளிரவில் எழுந்து கடப்பாரையை எடுத்து மகாலட்சுமியையும் , அவரது தாயாரையும் அடித்து கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
முருகனை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.

டெல்லியில், ரேஷன் பொருட்களை வீடு தேடிச்சென்று வழங்கும
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சேலம் மற்றும் ஈரோடு மாவ
சென்னை இரண்டாவது விமான நிலைய பணிகளை உடனே தொடங்க வேண்ட
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை உத்தர பிரதேச மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து உள கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம வங்காள தேசத்தின் சுதந்திர பொன் விழாவில் சிறப்பு விருந அவர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர். பள் ஐ.பி.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்கிற கனவோடு இருக்கும் இ
