More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • அரசின் சர்வாதிகார போக்கிற்கு எதிராக அணிதிரளுங்கள்- பிரதீபன்
அரசின் சர்வாதிகார போக்கிற்கு எதிராக அணிதிரளுங்கள்- பிரதீபன்
Jul 15
அரசின் சர்வாதிகார போக்கிற்கு எதிராக அணிதிரளுங்கள்- பிரதீபன்

நாட்டின் சொத்துக்களையும் இறைமையையும் தாரைவார்க்கும் அரசின் சர்வாதிகார போக்கிற்கு எதிராக அணிதிரளுமாறு புதிய ஜனநாயக மாக்கிசலெனினிச கட்சியின் வன்னிமாவட்ட செயலாளர் என். பிரதீபன் அழைப்பு விடுத்துள்ளார்.



இது தொடர்பாக அவரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,



கோட்டாபாய மகிந்த தலைமையிலான அரசாங்கம் மக்கள் விரோத செயற்பாடுகளை தொடர்ந்து கொண்டிருப்பதனை அண்மைக்காலங்களாக அவதானிக்க முடிந்துள்ளது. உணவுப்பொருட்கள், எரிபொருள் ஆகியவற்றின் சடுதியானவிலை அதிகரிப்பு நாட்டுமக்களை, குறிப்பாக உழைக்கும் மக்களை வாட்டிவதைத்து வருகின்றது. 



அத்துடன் நாட்டின் முதுகெலும்பாகவுள்ள விவசாயிகளின் உரப்பிரச்சனைக்கு உரியமாற்று தீர்வுகளை காணாமல், பசளையை நிறுத்தியது விவசாயிகளின் தலையில் கல்லைப்போட்டு கொல்வதற்கு சமமானது. அத்துடன் கொத்தலாவல இராணுவ பல்கலைகழக சட்டமூலமானது உயர்கல்வித்துறை இராணுவமயமாக்கப்படும் அபாய நிலமையை ஏற்ப்படுத்தியுள்ளது.



இதேவேளை  நாட்டின் சொத்துக்களையும் இறைமையும் தாரைவார்க்கும் அரசின் செயற்பாடுகளை கண்டிக்கும் அரசியல் சமூக செயற்பாட்டாளர்களை காவற்துறை அராயகத்தை கட்டவிழ்த்து கைதுசெய்து தனிமைப்படுத்தும் எதேச்சியதிகாரமான செயலை இந்த அரசு முன்னெடுத்து வருகின்றது.



 இவற்றை முன்னிறுத்து அரசின் இத்தகைய செயற்பாடுகளை கண்டித்து எதிர்வரும் 17 ஆம்திகதி சனிக்கிழமை வவுனியா பழையபேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.  குறித்த போராட்டத்தை வலுப்படுத்துமாறு புதிய ஜனநாயக மாக்கிசலெனினிச கட்சியின் வன்னி மாவட்ட கிளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் அரசியல் ஜனநாயக உரிமையில் கோட்டா, மகிந்த அரசு கைவைப்பதினை கண்டிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த போராட்டத்தில் இன மத மொழி பேதம் கடந்து அனைத்து அமைப்புக்களையும் கலந்துகொள்ளுமாறு கட்சி அழைத்து நிற்கின்றது. என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb20

விவசாயிகள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கும், அ

Feb09

கம்பளை கலஹா பகுதியில் 12 வயதான யோகராஜா கலைவாணி எனும் சி

Jul08

திருகோணமலையில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட

Sep24

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள  சாம்பல்தீவு, நாயாறு, ந

Apr04

  நிதியமைச்சர் பதவியை பொறுப்பேற்குமாறு பல அமைச்சர்க

Sep22

மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் அணுகுமுறை மாறும்

Oct26

யாழ்ப்பாணத்தில் சூரிய கிரகணம்  நேற்று மாலை 5.27 மணி முத

Jun06

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிர

Mar31

நாட்டில் மூவரில் ஒருவர் சோம்பேறியாக உள்ளனர் என அடையாள

Jan27

யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குக

Jan27

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடாகவே தமி

Aug27

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கு

Mar28

இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகளைப் பயன்படுத்த

Feb07

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தனது எரிபொருளின் விலையை நள்ளிரவு

Jul26

ரிஷாட் பதியுதீனின் வீட்டில் தீ காயங்களுடன் உயிரிழந்த

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 12 (07:43 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 12 (07:43 am )
Testing centres