கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் (84). இவர், பெருங்குடல் பிரச்சினை காரணமாக வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 4ம் தேதி அறுவை சிகிச்சை நடந்தது.
அதன் பிறகு, அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. பின்னர் காய்ச்சல் குறைந்தது. இருப்பினும் அவர் தொடர்ந்து மருத்துவமனையில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார். அவர் மருத்துவனையிலேயே தினமும் பிரார்த்தனை மற்றும் ஞாயிறு வழிபாட்டை நடத்தினார்.
இந்நிலையில் அறுவை சிகிச்சை நடந்த 10 நாட்களுக்கு பிறகு போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று வாடிகன் திரும்பினார். கெமல்லி மருத்துவமனையில் இருந்து தனது சொகுசு காரில் புறப்பட்ட போப் ஆண்டவர் பிரான்சிஸ், வாடிகன் செல்வதற்கு முன்பாக ரோம் நகரில் உள்ள சாண்டா மரியா பேராலயத்துக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
பொதுவாக அவர் வெளிநாடு பயணங்களை முடித்துவிட்டு ஊர் திரும்பும் போது இந்த பேராலயத்தில் வழிபாடு நடத்துவது வழக்கம். போப் ஆண்டவர் பிரான்சிஸ், வரும் செப்டம்பர் 12 முதல் 15 வரை ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுவன் Rayan சடலமாக மீட்கப்பட்ட நிமிடங்களில் நடந்த சில வ
பிரான்சில், 2 செய்தியாளர்களின் ஸ்மார்ட்போன்களில் பெகா
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
இந்தோனேசியா நாட்டின் கடற்படைக்கு சொந்தமான, கே.ஆர்.ஐ. நங
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் 20 ஆண்டுகால போரை முடிவுக்
எதிர்கொண்டிருந்த நிலையில் தப்பியோடிய கைதி ஒருவரையும
நைஜீரியாவில் கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல
நெருக்கடியில் உள்ள இலங்கையின் கடன் சுமையை குறைக்க சீன
அவுஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத் தீயினால் 30 க்
ஆர்ஜென்டினாவில் கொரோனாத் தொற்றுப் பலவல் காரணமாக அந் ந
