பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 53 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 53 இடங்களில் 8 இடங்கள் நியமன உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சூழலில், மீதமுள்ள 45 இடங்களுக்கு தேர்தல் நடந்தது.
கடுமையான வன்முறைகள் மற்றும் மோசடி புகார்களுக்கு மத்தியில் இந்தத் தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தலின் போது நடந்த வன்முறையில் 2 பேர் பலியாகினர். போலீசார் உள்பட பலர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், வாக்குப்பதிவு முடிவடைந்ததும் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி 23 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
இந்தத் தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி 10 இடங்களைக் கைப்பற்றி 2-வது இடத்தைப் பிடித்தது. அதேசமயம் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் உள்ளவர்களை அழிக
இலங்கையின் கட்டுநாயக்க, பண்டா
புதிய வகை கொரோனாத் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தென் ஆ
தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு
கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் கடந்த 14-ம் தேதி கால
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிராக நட
இங்கிலாந்தில் டெல்டா வைரஸ் தாக்கம் கடுமையாக உள்ள நிலை
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்துள்ளது. ரஷியா உடனான இந
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்ட
பிரித்தானிய முன்னாள் இராணுவ விமானிகள் சீன இராணுவத்தி
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது.
கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியை கைப்பற்றும் தீவிர
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் ஹர்னாய் மாவட்ட
உக்ரைனில் சிக்கிய பாகிஸ்தான் மாணவர்கள் இந்தியக் கொடி
ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் பதுங்கியிருக்கும் பயங்கரவ
