முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 13ம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அரசு தலைமை கொறடா அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் எஞ்சியுள்ள 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடைபெறவுள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வரும் நிலையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டினார் முதல்வர் ஸ்டாலின். உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்ட திமுக செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அக்கூட்டத்தில், வரும் உள்ளாட்சி தேர்தலில் 100க்கு 100% வெற்றி பெற பாடுபடுங்கள், மக்கள் மத்தியில் திமுகவுக்கு இருக்கும் நல்ல பெயரை பயன்படுத்தி தேர்தலுக்காக பாடுபடுங்கள் என முதல்வர் ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த நிலையில், வரும் 13ம் தேதி மாலை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அரசு தலைமை கொறடா கோவி.செழியன் அறிவித்துள்ளார்.
அன்று மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ கூட்டம் நடைபெற உள்ளதாகவும் எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மாலை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் நிலையில் காலையில் திமுக அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது என்பது நினைவுகூரத்தக்கது.

எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் மற்ற
மகாராஷ்டிராவில் உருமாறிய
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 20 சீட்டுகளை சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன தமிழக காவல்துறையினருக்கு ஊக்கத்தொகையாக ரூ.5000 வழங்கப்ப சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை இந நாமக்கல் அருகே புத்தாண்டு விற்பனைக்காக, வீட்டில் விதி சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் டாக்டர் தருண், ஏற அசாம் சட்டசபைக்கு 3 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு நடந் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24-ந பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை, எல்லைப்பகுதிய தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 2022-23ம் கல்வ கேரளாவில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் யானை பாகன் மீ பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளக் கட்டுமான பொருட்களை ஏற்மத்திய அரசின் 3 வேளாண் சட்டத் திருத்த மசோதா
