More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • பிள்ளை போல் வளர்த்த 40 நாய்களுக்கு தனித்தனி சமாதி அமைத்து வழிபடும் முதியவர்!
பிள்ளை போல் வளர்த்த 40 நாய்களுக்கு தனித்தனி சமாதி அமைத்து வழிபடும் முதியவர்!
Aug 06
பிள்ளை போல் வளர்த்த 40 நாய்களுக்கு தனித்தனி சமாதி அமைத்து வழிபடும் முதியவர்!

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள சித்தத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கச்சாமி (வயது 77). இவருக்கு திருமணம் ஆகவில்லை. கிராமத்திற்கு அருகே காட்டுப் பகுதியில் ஒரு சிறிய வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு சிறு வயது முதலே நாய்கள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் உண்டு.



தனது வீட்டில் பல நாய் குட்டிகளை வாங்கி வளர்த்து வந்துள்ளார். தான், செல்லமாக வளர்த்த நாய்களில் ஏதாவது இறந்துவிட்டால், தனது வீட்டை சுற்றி இருக்கும் இடத்தில் அடக்கம் செய்து அதில் சிறிய சமாதியும் எழுப்பி வந்துள்ளார். பல ஆண்டுகளாக அவர் நாய்கள் வளர்த்து வந்ததில், உடல்நலக்குறைவாலும், முதுமையிலும் சுமார் 40 நாய்களுக்கு மேல் இறந்துள்ளன. அனைத்து நாய்களுக்கும் தனித்தனியாக சமாதி எழுப்பி இருக்கிறார். தினமும் அங்கு சென்று வழிபாடும் செய்கிறார்.



வளர்க்கும் எஜமானர்களுக்கு உயிருள்ளவரை நாய்கள் விசுவாசமாக இருக்கும். ஆனால், தான் வளர்த்த நாய்கள் இறந்த பின்பும், அதற்கு சமாதி அமைத்து கடவுளாக வழிபட்டுவரும் தங்கச்சாமியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஊன்று கோல் உதவியுடன் நடமாடி வரும் அவர், இதுகுறித்து கூறியதாவது:-



சிறு வயது முதலே எனக்கு துணையாக இருக்க நாய்களை வளர்த்து வந்தேன். அதற்கு சரிதா, துரைச்சாமி, நல்லம்மா, வெள்ளச்சி, ராமர் என பல்வேறு பெயர்களை சூட்டி அழைத்தேன்.



அரசு வழங்கும் உதவித் தொகையின் மூலம்தான் நானும், நாய்களும் சாப்பிட்டு வந்தோம். காட்டு பகுதியில் தனியாக வசித்து வந்ததால் என்னுடன் பேசி பழகுவதற்கு ஆட்கள் யாரும் அருகில் இல்லை. இதனால் நாய்களைத்தான் என்னுடைய குடும்பத்தினராக பாவித்து, பிள்ளை போல் அவற்றுடன் பேசி வந்தேன். நான் வளர்த்து வந்த நாய்கள் அனைத்தும் என்னுடன் மிகவும் பிரியமாக இருக்கும். எனக்கு சிறிது உடம்பு சரியில்லை என்றால் நாய்கள் அன்று முழுவதும் சாப்பிடாமல் அடம்பிடித்த நிலையில் இருக்கும். நான் இதுவரை வளர்த்து வந்த 40 நாய்கள் அவ்வப்போது இறந்து போனதால் அவற்றின் பிரிவை தாங்க முடியாமல் எனது வீட்டின் அருகே அடக்கம் செய்து சிறிய சமாதி அமைத்து அவற்றில் தினந்தோறும் வழிபாடு செய்து வருகிறேன்.



இவ்வாறு அவர் கூறினார்.



முதுமை அடைந்துவிட்ட தங்கச்சாமிக்கு உறுதுணையாக அவரது வீட்டில் இப்போது ஒரே ஒரு நாய் மட்டு்ம் உள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan24

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகளான நிஹார

Oct03

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றும

Dec31

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட

Aug28

கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரி

Sep05

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில்

Feb07

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சூரஜ்குமார் மிதி

Oct02

துபாயில் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி இன்று தொடங்கியது. அடு

Jun02

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவ தொடங்கிய பிறகு கடந்த ஏ

Feb10

இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல

Aug13
Jun02

முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் மக்களின் இயல்பு ந

Sep28

தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்த

May25

தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் இளைஞர்களுக்கு வேலைவா

Feb27

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் உக்கிரம் அடைந்து வர

Apr08

சென்னை மெரினாவில் நடமாடும் மருத்துவ வாகன சேவை திட்டத்

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (12:52 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (12:52 pm )
Testing centres