நாட்டை முடக்குவது குறித்து நடுநிலை கொள்கையின் அடிப்படையில் அரசாங்கம் தீர்மானத்தை மேற்கொள்ளும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நாடு பல மாதங்கள் மூடப்பட்டதன் பின்னரே திறக்கப்பட்டது. சுமார் 15 இலட்சம் அரச ஊழியர்கள் கடைமையாற்றுகின்றனர். அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது.
எனினும் சுய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு நாளாந்த வருமானத்தை பெறுவோர் தொடர்பில் எவரும் வாய் திறப்பதில்லை.
உலகில் பலமிக்க பொருளாதார வல்லமை கொண்ட நாடுகள்கூட கொரோனா தொற்று காரணமாக ஆரம்பத்தில் நாட்டை மூடிய போதிலும் மீண்டும் நாட்டை திறந்ததனால் இந்த தொற்றை எதிர்கொள்ள நேரிட்டது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்த போதிலும் அரசாங்கம் அது தொடர்பில் நடுநிலை கொள்கையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை ஊரிப் பகுதியில் மூன்று லிட்
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை அடுத்த மாதம் ந
கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் வடமேல் திசையில் நங்
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசாங்கத்தால் விரைவில்
இலங்கையில் நாளைய தினம் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படும
2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்களை விசா
தனிப்பட்ட தேவைக்காக வெளிநாடு சென்றிருந்த தொழிலாளர் த
கொழும்பு பம்பலப்பிட்டியில் ஏழு மாடி கட்டிடத்தில் இரு
கடந்த 30 வருடங்களுக்கு முன் நோர்வே நாட்டு தம்பதியினா
கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக நாடளாவிய ரீதியி
புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு ஆதரவு கோரப்படுவதா
இந்தியாவிடம் இருந்து மற்றுமொரு தொகுதி அஸ்ட்ராசெனகா க
இலங்கையின் சிறைச்சாலைகளில் ஊழல் மற்றும் முறைகேடுகளை
வவுனியா நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலமைத்