More forecasts: 30 day weather Orlando

  • All News
  • போராட்டங்களில் ஈடுபடுவோரை பயங்கரவாதிகளாக சித்தரிக்க வேண்டாம்- இரா. சாணக்கியன்
போராட்டங்களில் ஈடுபடுவோரை பயங்கரவாதிகளாக சித்தரிக்க வேண்டாம்- இரா. சாணக்கியன்
Sep 19
போராட்டங்களில் ஈடுபடுவோரை பயங்கரவாதிகளாக சித்தரிக்க வேண்டாம்- இரா. சாணக்கியன்

நாட்டு மக்கள் கையில் பிள்ளைகளுடன் வீதியில் இறங்கிப் போராடும் நிலைமை ஏற்பட்டால்இ நாட்டின் நிலைமை மிகவும் பாரதூரமாக அமைந்துவிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.



பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்று அநுராதபுரத்தில் இடம்பெற்றது.



இதன்போது கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்



பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



காங்கேசன் துறை முதல் ஹம்பாந்தோட்டை வரை வாகனப் பேரணியாக எமது இந்தப் பணி இடம்பெறவுள்ளது.



அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளா?



பயங்கரவாதத் தடைச்சட்டத்தால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் வசந்த முதலிகே பயங்கரவாதியா என கேட்க விரும்புகிறேன்.



அவர் இந்த நாட்டு மக்களுக்காகத்தான் போராடினார். இவர் மட்டுமன்றி எதிர்க்காலத்தில் பல சிங்கள இளைஞர்களும் இந்தச் சட்டத்தால் கைது செய்யப்படுவார்கள்.



இன்று தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று சிங்கள பிரதிநிதிகள் கூறும் அளவுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது.



இது உண்மையில் மகிழ்ச்சியான விடயமாகும்.



ஆனால்இ மக்களையும் போராடிய இளைஞர்களையும் பிரிக்க அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது. இதனால்தான் போராடிய அனைவரையும் பயங்கரவாதிகளாக சித்தரிக்க அரசாங்கம் முற்படுகிறது.



மூன்று வேளை உணவு உண்டுவந்த மக்கள்இ இன்று வெறும் இரண்டு வேளை உணவைத்தான் உட்கொள்கிறார்கள்.



கடந்த காலங்களில் தேசியக் கொடியையும் பதாதைகளையும் ஏந்தி போராட்டங்களில் ஈடுபட்ட மக்கள் எதிர்க்காலத்தில் தங்களின் பிள்ளைகளை கையில் சுமந்துக் கொண்டுஇ போராட்டத்திற்கு வந்தால் நிலைமை பாரதூரமானதாக இருக்கும் என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிடக் கூடாது.



எதிர்க்காலத்தில் இலங்கையர் அனைவரையும் பயங்கரவாதிகளாக சிந்தரிக்க இடமளிக்க வேண்டாம்.- என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct25

செம்பருத்தி சீரியல் மூலம் தமிழக மக்கள் மனதில் கதாநாயக

Sep19

நாட்டு மக்கள் கையில் பிள்ளைகளுடன் வீதியில் இறங்கிப் ப

Feb04

ஊவா மாகாணம், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் அம்பாந் தோட

Sep27

சந்தையில் வாகனங்களின் விலைகள் வேகமாக குறைவடைந்து வரு

Sep24

வளர்ந்து வரும் நாடுகளின் விருப்பங்கள், தொலைநோக்கு ஆகி

Mar19

உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையி

Jan23

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொ

Oct01

புனர்வாழ்வு பணியகத்தை அமைப்பதற்காக கொண்டுவரப்பட்ட ச

Sep27

முன்னாள் அமெரிக்க உளவுத்துறை ஒப்பந்ததாரர் எட்வர்ட் ஸ

Sep16

அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமெரிக்கத் தடைகள் ந

Feb03

ராகம வைத்திய பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தாக்க

Jan10

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர் ஒருவரால்

Sep28

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய பேரவையில் இணையாது என

Apr09

வெடுக்குநாறி ஆதி சிவன் கோவில் பிரச்சனையில் நடந்திருப

Oct25

18 வயது யுவதியொருவரை வன்புணர்வு செய்த குற்றத்தில்19 வயத

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 17 (17:11 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 17 (17:11 pm )
Testing centres